தமிழகத்தில் பள்ளிக்கு வராத மாணவர்களின் நிலை – கல்வித்துறை சுற்றறிக்கை!!
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 ஆண்டுகளாக பள்ளி படிப்பை தொடராமல் இடைநின்ற மாணவர்களின் விவரங்களை அறிக்கையாக தொகுத்து அதனை ஆன்லைன் மூலமாக மார்ச் மாதம் 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இடைநின்ற மாணவர்களின் விவரங்கள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் மார்ச் மாதம் முதல் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாணவர்கள் பள்ளி படிப்பை தொடராமல் உள்ளனர். இதில் பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்களே உள்ளனர். காரணம், பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இது தனியார் பள்ளி மாணவர்களுக்கு சாத்தியம் ஆகும். ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு இது சாத்தியம் ஆகாது.
TN Job “FB Group” Join Now
எனவே அவர்கள் குடும்ப சூழ்நிலைக்காக குழந்தை தொழிலாளர்களாக மாறும் நிலை உள்ளது. இதனை சரி செய்யும் நோக்கில் அரசும் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதன் காரணமாக ஒரு சில மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர்ந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை 2011-2012 கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட்டது.
எம்.பில், பி.எச்டி ஆராய்ச்சி படிப்புகளுக்கான கால அவகாசம் நீட்டிப்பு – யுஜிசி அறிவிப்பு!!
இந்த திட்டத்தின் படி 2011-2012 முதல் 2020-2021 கல்வியாண்டு வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களில் இடைநின்ற மாணவர்களின் பட்டியலை தயார் செய்து அதனை ஆண்டு வாரியாக தொகுத்து தமிழக அரசின் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் மாதம் 19 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். அதனுடைய நகலை மாவட்ட இயக்குநகரத்திற்கு தபால் மூலமாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் அனுப்பி வைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.