தமிழகத்தில் இன்று (பிப். 12) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்த பெய்து வரும் கனமழை காரணமாக இன்று (பிப்.12) அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு.
பள்ளிகளுக்கு விடுமுறை:
தமிழகத்தில் நேற்று முதல் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து, கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பிப்.19ம் தேதி அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!
மேலும் இன்று டெல்டா மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி,திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் சாலைகளில் மழைநீர் தேங்கி இருக்கிறது. அதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
அதனால் திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு நடைபெறும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா ஊரடங்கிற்கு பின் தற்போது தான் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மீண்டும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் மாணவர்கள் சிரமத்தில் இருக்கின்றனர்.