தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை - பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை - பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!
தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை – பள்ளிக்கல்வித்துறை முக்கிய தகவல்!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பொது தேர்வுக்கான அட்டவணையை விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

தேர்வு அட்டவணை

தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. அத்துடன் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவாக பாடங்களை நடத்துமாறு ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏனெனில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு கட்டாயமாக நேரடி முறையில் பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பிப்.19ம் தேதி அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை – மீறினால் கடும் நடவடிக்கை!

இதையடுத்து முதல் கட்டமாக முதல் திருப்புதல் தேர்வு பொதுத்தேர்வு போல நடைபெற்று கொண்டிருக்கிறது. இத்தேர்வுகள் வருகிற 17ம் தேதி வரை நடைபெறும். இதனை தொடர்ந்து 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் மாதம் 28ம் தேதி முதல் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை பொது தேர்வு போல நடத்த உள்ளது. ஏனெனில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தைரியமாக தேர்வை எதிர்கொள்ள முடியும். அத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி தொடங்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும் இவ்வாறு தொடர்ச்சியாக பொது தேர்வை முடிப்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அத்துடன் மே 1ல் மே தினம் மற்றும் மே 2 அல்லது 3ம் தேதி அன்று ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வருவதால் அதற்கு முன் தேர்வுகளை நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் தேர்வு துறை அதிகாரிகள் உள்ளிடோர்களுடன் தகுந்த ஆலோசனைகளை மேற்கொண்டு முடிவுகள் எடுக்கப்படும். அதன்பின் தேர்வு அட்டவணையை விரைவில் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!