தமிழகம் முழுவதும் மழலையர் பள்ளிகள் திறப்பு – அரசுக்கு வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மழலையர் பள்ளிகளும் திறக்க அனுமதி வழங்குமாறு, அனைத்து பள்ளி நிர்வாகம் சார்பில் முதலமைச்சருக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மழலையர் பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா 3 வது அலை தாக்கம் காரணமாக பள்ளி,கல்லூரிகள் ஜனவரி 31 வரை விடுமுறை என தமிழக அரசு உத்தரவு அளித்தது. இதனால் ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டன. மேலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளான இரவு ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ஆகிய கட்டுப்பாடுகளும் அமலில் இருந்தது. இருப்பினும் அண்மையில் அனைத்து கட்டுப்பாடுகளில் தளர்வு மற்றும் 1 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு, கல்லூரிகள் திறப்பு என முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவு அடிப்படையில் இரவு ஊரடங்கு தடை , வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு தடை செய்யப்பட்டது. இந்த வகையில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் அடிப்படையில் மாணவர்கள் பள்ளிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இருப்பினும் மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகள் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. மேலும் 15 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து நடப்பு ஆண்டு பொதுதேர்வு நடத்த பள்ளிகல்விதுறை ஆலோசனை நடத்தி வருகிறது. இந்த நிலையில் மழலையர் பள்ளி, நர்சரி பள்ளிகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என அனைத்து பள்ளி நிர்வாக அதிகாரிகள், தலைமை செயலகத்திற்கு சென்று முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் 1 முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வரும் 14ம் தேதி முதல்வர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் நர்சரி பள்ளிகள் , மழலையர் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.