தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான புதிய பேருந்து வசதி – குவியும் பாராட்டுக்கள்!
தமிழகத்தில் உள்ள பள்ளிகள் வருகிற திங்கள் கிழமை முதல் தொடங்கப்பட இருக்கும் நிலையில் மாணவர்களின் வசதிக்காக கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பேருந்து வசதி
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மீண்டும் பள்ளிகள் அடுத்த வாரம் திறக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ஒன்றியம் பெரியகாரை கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியை சுற்றி 50க்கு அதிகமான கிராமங்கள் இருக்கின்றன. இந்த பள்ளியில் தொடர்ந்து 10 ஆண்டுகளாக 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குடும்ப தலைவிகளுக்கான ரூ.2000 உதவித்தொகை – யார் யாருக்கு வழங்கப்படும்?
ஆனால் பள்ளிக்கு எழுவன் கோட்டை, தெண்ணீர்வயல், உடப்பன்பட்டி, நாச்சியா புரம் கிராமங்களில் இருந்து வரும் மாணவ மாணவிகளுக்கு மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பெரியகாரையில் இருந்து தேவகோட்டை நகர் பஸ் நிலையம் வரை வழித்தடத்தில் செல்ல பேருந்து வசதி இல்லாமல் இருந்தது. அதனால் இந்த வழித்தடத்தில் புதிய பேருந்தை முன்னாள் மாணவர் பூமிநாதன் முன்னிலையில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.