தமிழகத்தில் நேற்று (மார்ச் 22) இந்த பகுதிகளில் மழை – வானிலை மையம் அறிக்கை!

0

தமிழகத்தில் நேற்று (மார்ச் 22) இந்த பகுதிகளில் மழை – வானிலை மையம் அறிக்கை!

தமிழகத்தில் நேற்று (மார்ச் 22) தென் மாவட்டங்களில் லேசான மழை பதிவாகி இருக்கிறது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

வானிலை அறிக்கை

தமிழகத்தில் மார்ச் மாத தொடக்கத்திலேயே கோடை வெயில் சுட்டெரிக்க தொடங்கிவிட்டது. ஒரு சில மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை அடைந்துள்ளது. ஆனால் நேற்று (மார்ச் 22) தென் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. அதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். இன்று வானிலை அறிக்கை வெளியிட்ட அறிக்கையில், நேற்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகி இருக்கிறது.

மார்ச் 25 முதல் 28 சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

அதே போல மதுரை மாவட்டம் புலிப்பட்டி , புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில், நாகுடி, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஆகியஇடங்களில் தலா 2 செமீ, தேனி மாவட்டம் போடி நாயக்கனூர், திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி, சேர்வலாறுஅணை, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், தொண்டி, சிவகங்கைமாவட்டம் காரைக்குடி, கோவைமாவட்டம் ஆனைமலை ஆகிய இடங்களில் தலா ஒரு செமீ மழை பதிவாகியுள்ளது. அதே போல இன்று முதல் மார்ச் 28 ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவ கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!