மார்ச் 25 முதல் 28 சிறப்பு ரயில்கள் இயக்கம் – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
இந்தியாவில் ஹோலி பண்டிகையை முன்னிட்டு மார்ச் 25 ஆம் தேதி 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சிறப்பு ரயில்கள்
நாடு முழுவதும் மக்கள் கொண்டாடும் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஹோலி பண்டிகை இருக்கிறது. ஹோலி பண்டிகை விடுமுறையை முன்னிட்டு மக்கள் பலர் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடுகின்றனர். அந்த வகையில் மார்ச் 25 ஆம் தேதி பயணிகளின் வசதிக்காக 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
IPL 2024: முதல் நாளே வெற்றி வாய்ப்பை தட்டி தூக்கிய CSK!
அதில், ஹோலி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரயில்வே சார்பில் மார்ச் 15 முதல் மார்ச் 31 வரை 28 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் 12 ரயில்கள் தமிழ்நாடு, கேரளத்தில் இருந்து குஜராத், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், பீகார், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு இயக்கப்படுகின்றன. மேலும் பயணிகளின் பாதுகாப்பாகவும், சிரமமின்றிபயணம் செய்ய ரயில்வே சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ரயில் பயணம் செய்யும் போது புகார் இருந்தால் ரயில்வே உதவி எண் 139யை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.