தமிழகத்தில் 4 பகுதிகளில் மார்ச் 25 ஆம் தேதி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற மார்ச் 25 ஆம் தேதி 4 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. காரணம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் பங்குனி மாதம் என்றாலே பல கோவில்களில் விசேஷங்கள் அதிகமாக நடக்கும். அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முக்கிய கோவில்களில் மார்ச் 25 ஆம் தேதி திருவிழா நடைபெற இருக்கிறது. அதனால் 4 தாலுகாக்களுக்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கே.எம்.சரயு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று (மார்ச் 22) இந்த பகுதிகளில் மழை – வானிலை மையம் அறிக்கை!
இது குறித்து வெளியான அறிக்கையில் ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாக்களுக்கு மார்ச் 25 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு இந்த 4 தாலுகாக்களுக்கு ஏளனமான பக்தர்கள் வருவார்கள். அதனால் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய ஏப்ரல் 6 ஆம் தேதி வேலை நாளாக இருக்கும் என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.