தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக இனி மின்தடை ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
மின்தடை
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 10,11,12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மார்ச் மாதம் முதல் பொதுத்தேர்வு தொடங்கி ஏப்ரல் மாதம் வரை நடைபெற்றது. மாணவர்களின் நலனிற்காக மார்ச் மாதம் முதல் ஏப்ரல் வரை மின் தடை ஏற்படவில்லை. இந்நிலையில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனால் மின்சார பழுது அதிகமாக ஏற்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வில் 50 நாளில் வெற்றி பெற அரிய வாய்ப்பு – முழு விவரங்கள் இதோ!
எனவே அடுத்த மாதம் முதல் வழக்கம் போல மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கோடை காலத்தில் மின் தடை ஏற்பட்டால் மக்கள் அதனை சமாளிக்க ஏற்பாடுகளை செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் மின்சார பழுதுகளை சமாளிக்க தேவைக்கு மட்டும் மின்சார பொருட்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.