தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜன.31க்கு பிறகு நீட்டிப்பு – முதல்வர் தீவிர ஆலோசனை!
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக அமலில் உள்ள ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கு ஆகியவைகளை ஜன.31க்கு பிறகு நீட்டிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
முதல்வர் ஆலோசனை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் மேலும் ஊரடங்குகள் கடுமையாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்திரவிட்டார். இந்த வகையில் இரவு ஊரடங்கு (இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்றவை அமலில் உள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் அனைத்து மாவட்டங்களில் தவறாமல் நடைபெற்று வருகின்றன.
தமிழகத்தில் நாளை (ஜன.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த அடிப்படையில் முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசியை பொதுமக்கள் போட்டு கொண்டு வருகின்றனர். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ,முன்கள பணியாளர்களுக்கு போடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நேற்று தினசரி பாதிப்பு 30,055 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து மாவட்டங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,94,260ஆக அதிகரித்துள்ளது.
100 நாள் மகாத்மா காந்தி ஊரக வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு – சம்பளம் கொடுப்பதில் சிக்கல்!
இதுவரை 29,45,678 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். அத்துடன் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,312 ஆக அதிகரித்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நாளை காலை முழு ஊரடங்கு மற்றும் இரவு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மற்றும் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.