100 நாள் மகாத்மா காந்தி ஊரக வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு – சம்பளம் கொடுப்பதில் சிக்கல்!
நாடு முழுவதும் தற்போது மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கான போதிய நிதி இல்லாததால் ஊதியம் கொடுப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.
100 நாள் வேலை:
இந்தியாவில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் 100 நாள் வேலை திட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் பொது வேலை செய்ய விருப்பமுள்ள கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் வயது வந்த சிலருக்கு வழங்கப்படுகிறது. இத்தகைய வேலைக்கு குறைந்த அளவிலான மக்கள் மட்டுமே சென்று வந்த நிலையில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிக அளவிலானோர் இந்த பணியில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் பிப்ரவரி 1க்கு பிறகு நீட்டிக்கப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!
ஆனால் இந்த கொரோனா காலகட்டத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக 100 நாள் வேலை பார்க்கும் அனைவருக்கும் ஊதியம் வழங்குவதில் சிரமம் ஏற்பட்டது. அதனால் ஊதியம் இல்லாமல் வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. இது குறித்து 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரியும் ஊழியர்கள் சம்பள பாக்கி சரியாக வரவில்லை என்று புகார் எழுப்பி வந்தனர். இதற்கிடையில் மத்திய அரசின் பட்ஜெட் இன்னும் சில நாட்களில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனால் 100 நாள் வேலைத் திட்டத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
காவலர் காலிப்பணியிடங்களுக்கு தயாராகும் தோ்வர்கள் கவனத்திற்கு – இலவச வகுப்புகள் தொடக்கம்!
இந்நிலையில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அனைத்து திட்டங்களுக்கும் முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட தொகைகளை வழங்கும் விதமாக செலவிடுவதிலே பெருமளவு காலியாகிவிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளாகவே பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் 20% பாக்கி தொகை செலுத்துவதற்கே சரியாகிவிடுகிறது. அதனை தொடர்ந்து அடுத்து வரும் 2022 – 23ம் ஆண்டுகளில் 100 நாள் வேலை திட்டத்திற்கு செலவிட ரூ.2.64 லட்சம் கோடி வரை தேவைப்படும் என ஒரு ஆய்வில் மதிப்பிட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.