சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தில்ருவான் பெரேரா – ரசிகர்கள் அதிர்ச்சி!
இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இன்று அறிவித்தார். இதனை SLC க்கு கடிதம் மூலம் தில்ருவான் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
ரசிகர்கள் அதிர்ச்சி:
39 வயதான தில்ருவன் பெரேரா, தனது முதல் போட்டியை 2014 யில் விளையாடினார். இலங்கைக்காக 43 டெஸ்ட், 13 ஒருநாள் மற்றும் 3 T20i போட்டிகளில் விளையாடியுள்ளார். இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி டெஸ்ட் பந்துவீச்சாளராக வலம் வந்த அவர், டெஸ்ட் கிரிக்கெட்டில் 161 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதைத்தொடர்ந்து இன்று அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக SLCக்கு கடிதம் அனுப்பி தில்ருவன் பெரேரா தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஜன.31க்கு பிறகு நீட்டிப்பு – முதல்வர் தீவிர ஆலோசனை!
இந்த நிலையில் டில்ருவன் பெரேரா இலங்கை கிரிக்கெட் சபையின் நிறைவேற்று அதிகாரி ஆஷ்லி டி சில்வாவுக்கு அனுப்பிய கடிதத்தில், ‘நான் இன்னும் சிறிது காலம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவேன். ஆனால், எனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடை கொடுப்பது இதுதான் சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டில் சில சிறந்த வீரர்களுடன் விளையாடும் பாக்கியமும் மரியாதையும் எனக்கு கிடைத்துள்ளது. அருமையான நினைவுகளுடன் மகிழ்ச்சி நிறைந்த இதயத்துடனும் நான் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுக்கிறேன்‘ என்று தில்ருவான் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் வங்கியில் (Axis) டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – சற்று முன் வெளியானது..
மேலும் சர்வதேச உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் டில்ருவன் பெரேரா பல மகத்தான சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இதில் 200 க்கு மேற்பட்ட முதல் தர போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 808 முதல்தர விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து இலங்கைக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் ஐந்தாவது இடத்தில் டில்ருவன் பெரேரா திகழ்கிறார். தில்ருவான் பெரேரா கடைசியாக 2021 யில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.