தமிழகத்தில் நாளை (ஜன.27) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஜன.27) மின்தடை ஏற்பட இருக்கிறது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தவிர்க்க முடியாத மின் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துகள் மின் கோளாறு மற்றும் மின் கசிவு காரணமாக ஏற்படுகிறது. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாகவும் பல்வேறு பகுதிகளில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த விபத்துக்களை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை செய்து வருகின்றனர். இதற்காக பராமரிப்பு மேற்கொள்ளப்படும் துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட நேரம் மின்தடை ஏற்படும்.
100 நாள் மகாத்மா காந்தி ஊரக வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு – சம்பளம் கொடுப்பதில் சிக்கல்!
இதனால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுவதால் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டையில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும். அந்த வகையில் நாளை (ஜன.27) இந்த துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆ. மதியழகன் அவர்கள் தெரிவித்துள்ளார். அத்துடன் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பிப்ரவரி 1க்கு பிறகு நீட்டிக்கப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்? முதல்வர் நாளை ஆலோசனை!
இதனை தொடர்ந்து உள்ளிக்கோட்டையில் துணை மின் நிலையத்தின் மூலமாக மின்சாரம் பெறும் பகுதிகளான உள்ளிக்கோட்டை, மேலத்திருப்பாலக்குடி, கீழத்திருப்பாலக்குடி, கண்டிதம்பேட்டை, தளிக்கோட்டை, மகாதேவப்பட்டணம், பரவாக்கோட்டை, கூப்பாச்சிக்கோட்டை, வல்லான்குடிக்காடு, இடையா்நத்தம், ஆலங்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்குள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.