11, 12ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் விலக்கு – அரசிடம் கோரிக்கை!!
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில், மே மாதம் 3 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா என ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆசிரியர்களுக்கான விலக்கு:
தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் பல அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மே மாதம் 3 ஆம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் பணியில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். அவர்களுக்கான தேர்தல் பணி குறித்த பயிற்சி வகுப்புகள் அடுத்த வாரம் இறுதியில் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளதால் ஆசிரியர்கள் அடுத்த நாள் நடைபெறும் பொதுத்தேர்வில் ஈடுபாடு குறைவாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவமனையில் சான்றிதழ் படிப்புகள் – மார்ச் 15 ஆம் தேதி கடைசி நாள்!!
மேலும் தேர்தல் பயிற்சி வகுப்பில் ஆசிரியர்கள் கலந்து கொள்ள உள்ளதால் அவர்களுக்கு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்திட்டங்களை முடிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், அவர்கள் ப்ளஸ்-2 தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் பணியில் கவனம் சிதறவும், தொய்வு ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்கு எண்ணிக்கை சில தொகுதிகளில் நள்ளிரவு வரை நடக்கும். சில சமயம் மறுநாள் காலை வரை கூட நடக்கும்.
காமராஜர் பல்கலை பருவத்தேர்வுகள் தேதி அறிவிப்பு – மார்ச் 22 முதல் தொடக்கம்!!
இதனால் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு அங்கையே தங்கி இருக்க வேண்டிய நிலை இருக்கும். எனவே சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு விலக்கு வழங்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்