தமிழகத்தில் நுழைய இ-பாஸ் அவசியம் – அரசு அறிவிப்பு!!

0
தமிழகத்தில் நுழைய இ-பாஸ் அவசியம் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் நுழைய இ-பாஸ் அவசியம் - அரசு அறிவிப்பு!!
தமிழகத்தில் நுழைய இ-பாஸ் அவசியம் – அரசு அறிவிப்பு!!

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இ-பாஸ் முறை:

நாடு முழுவதும் கொரோனா தாக்கம் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஒரு மாநிலத்தில் இருந்து இன்னொரு மாநிலத்திற்கு பயணம் செய்ய இ-பாஸ் முறை கட்டாயமாக்கப்பட்டது. பின்னர் கொரோனா தாக்கம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டபின் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு தற்போது கொஞ்சம் கொஞ்சமாக இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை பரிமாண வளர்ச்சி அடைந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வந்தது அதன்காரணமாக பல நாடுகளில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமான போக்குவரத்தும் டிசம்பர் மாதம் முதல் நிறுத்திவைக்கப்பட்டது. இவ்வாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை பல எடுத்த போதிலும் கொரோனா தாக்கம் இந்தியாவில் தற்போது பரவி வருகிறது.

அண்ணா பல்கலை எம்.டெக் மாணவர் சேர்க்கை – 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு!!

மகாராஷ்டிரா, புனே பகுதிகளில் பரவி வரும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த மாதம் முதல் ஊரடங்கு விதிமுறைகளை கடுமையாக்கினர். அதன்படி தற்போது தமிழக அரசு வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் மாநிலங்களுக்கு இடையே பயணம் செய்ய ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா மாநிலங்களை தவிர்த்து மற்ற மாநிலங்களை சேர்ந்தவர்கள் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!