அரசு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் பணிவரன்முறை – அரசுக்கு கோரிக்கை!!
அரசு கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் மதுரை மாவட்டத்தை சுற்றியுள்ள கல்லூரி விரிவுரையாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அனைவரையும் பாரபட்சமின்றி பணிவரன் முறைபடுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கவுரவ விரிவுரையாளர் பணிவரன் முறை:
தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் 41 உறுப்பு கல்லூரிகளில் 14 கல்லூரிகள் முதலில் அரசு கல்லூரிகளாகவும், பிறகு 27 கல்லூரிகள் அரசு கல்லூரிகளாகவும் மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை மண்டல கல்வி இணை இயக்குனர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டு பணிவரன் முறை செய்யப்படும். மேலும் அதில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அந்தந்த பல்கலைக்கழகமே மாதம் ஊதியமாக ரூ.15000 வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
TN Job “FB Group” Join Now
இந்த அறிவிப்பின் படி பணிவரன்முறை செய்ய அந்த கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் சென்னையில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிவரன் செய்ய அறிவிக்கப்பட்ட இந்த நேர்காணலுக்கு மதுரை மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர், வேடசந்தூர் உட்பட 27 கல்லூரிகளின் கவுரவ விரிவுரையாளர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை என புகார் எழுந்துள்ளது.
இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு – பிப்ரவரி 24 வரை நடைபெறும்!!
இதுகுறித்து கவுரவ விரிவுரையாளர்கள் கூறுகையில், “மதுரை மண்டலத்தில் அரசு கல்லூரிகளாக மாற்றப்பட்ட 27 கல்லூரிகளில் பணிபுரியும் அதே தகுதி உள்ள கவுரவ விரிவுரையாளர்களை புறக்கணிப்பது வேதனை அளிக்கிறது. எங்களை நேர்காணலுக்கு அழைப்பு விடுக்க வேண்டும்”, இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்