தமிழக சட்டமன்ற தேர்தல் பணியாளர்களுக்கு சிறப்பு விடுமுறை – அரசு அனுமதி!!
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் பணியில் ஈடுபட்டதால் இந்த மாதத்திற்குள் அதற்கு பதிலாக சிறப்பு விடுமுறை எடுத்து கொள்ளலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
சிறப்பு விடுமுறை அனுமதி:
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரு கட்டமாக நடைபெற்றது. தேர்தல் பணிகளில் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், முன்னாள் காவலர்கள் என பலர் பணியாற்றினர். அவர்களுக்கு நான்கு கட்ட தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைக்கு பின்னர் 10 மாதங்கள் கழித்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் அவர்கள் பள்ளிகளில் பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்பட்டன. இதனால் ஆசிரியர்களுக்கு பணி சுமை அதிகரித்தது. இதன் காரணமாக சட்டமன்ற தேர்தல் வாக்குபதிவு நாளான ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு அடுத்த நாள் ஏப்ரல் 7 ஆம் தேதி ஆசிரியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அதற்கு பல மாவட்ட நிர்வாகம் ஏற்கவில்லை.
CBSE 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து – 1 லட்சம் பேர் கையெழுத்து!!
இந்நிலையில் தற்போது தேர்தல் பணிகளில் ஈடுபட்ட வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, பள்ளிக்கல்வித்துறை, வேளாண்மைத்துறை, சுகாதாரத்துறை, கூட்டுறவு துறை, போன்ற 20 க்கு மேற்பட்ட அரசு துறைகளை சேர்ந்த பணியாளர்கள் தேர்தல் பணிக்கான விடுமுறையை இந்த மாதத்திற்குள் வேறுஒரு நாளில் சிறப்பு விடுமுறையாக எடுக்கலாம் என அரசு அனுமதி வழங்கியுள்ளது.