தமிழகத்தில் அரசு, தனியார் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு வசதி ஏற்படுத்தி தரும் வழக்கில் நீதிமன்றம் புதிய உத்தரவை வெளியிட்டுள்ளது.
நீதிமன்றம் உத்தரவு
தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும் அவர்களுக்கு படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் சில இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பொது இடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு பயணத்திற்கு தேவையான வசதிகள் செய்யப்படவில்லை.
குறிப்பாக அரசு, தனியார் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் ஏறி இறங்கும் வகையில் வசதி இல்லை. இது குறித்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் பல உத்தரவுகளை ஏற்கனவே பிறப்பித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மனுவை பரிசீலித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு செயலர் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.