தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
வானிலை தகவல்:
தமிழகத்தில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் கடுமையான மழை பெய்தது. இதனால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் அதிக மழை பெய்து மாவட்டம் முழுவதும் மின்தடை ஏற்பட்டது. இருப்பினும் தற்போது மழை காலம் ஓய்ந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்த வகையில் தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்து வருகின்றன. இந்த நிலையில் இன்றய வானிலை தகவல்களை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
27.01.2022: வட தமிழக கடலோர மாவட்டங்கள், தென்காசி, திருநெல்வேலி,தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
28.01.2022: தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
29.01.2022, 30.01.2022: தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைபெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
31.01.2022: தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைபெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலை நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
28.01.2022 : மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுஇகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.