தமிழக தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூல் – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை!
தமிழக தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதனை மீறும் பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
கல்வி கட்டணம்:
தமிழகத்தில் கடந்த வருடங்களில் பரவிய கொரோனா பெருந்தொற்றின் தாக்கத்தால் விதிக்கப்பட்ட ஊரடங்கால் மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் தினசரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வந்தது. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வின்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் போது மக்கள் வேலையிழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வரும் நிலையில் தனியார் பள்ளிகள் கல்வி கட்டணத்தை செலுத்த சொல்லி மாணவர்களின் பெற்றோர்களை வலியுறுத்தியது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
இந்த நிலையில் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி கல்வி கட்டணம் குறித்து புகார் தெரிவித்தனர். இது குறித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணையின் போது தனியார் பள்ளிகள் 75% கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும் இந்த 75% கட்டணத்தை 40% 35% என இரு தவணைகளாக நிர்வாகங்கள் வசூலித்துக் கொள்ளவும் என உத்தரவிட்டது. கடந்த ஆண்டை போலவே 2022 – 2023 ம் கல்வியாண்டிலும் தனியார் பள்ளிகள் 75 சதவீத கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
மாணவர் சேர்க்கையின் போது நன்கொடை, கட்டிட நிதி, அறக்கட்டளை நிதி என்ற மறைமுக கட்டணங்கள் ஏதும் வசூலிக்க கூடாது. நிர்ணயித்த கல்வி கட்டணத்தை மட்டுமே பள்ளி நிர்வாகம் மாணவர்களிடம் இருந்து பெற வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசிடம் புகார் தெரிவித்தால் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.