அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?

0
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு - புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினர் பெயரை சேர்ப்பது எப்படி?

இந்தியாவில் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மலிவான விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இதில் புதிய உறுப்பினர்களை எப்படி சேர்ப்பது என்பது குறித்த வழிமுறைகளை பற்றி விரிவாக பார்ப்போம்.

ரேஷன் கார்டு

இந்தியாவில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் குறைந்த விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் இலவசமாகவும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது ரேஷன் பொருட்களை தகுதியான நபர்களுக்கு கிடைக்க வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி “ஒரே நாடு ஒரே ரேஷன்”, என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதன் மூலமாக ரேஷன் கடைகளில் முறைகேடு ஏற்படுவது குறைந்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – DA நிலுவைத்தொகை எப்போது கிடைக்கும்?

மேலும் ரேஷன் கார்டில் வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் இடம் பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். அதனால் நீங்கள் புதியதாக திருமணமானவராக இருப்பின் உங்களின் மனைவியின் பெயர் இணைக்கப்பட வேண்டும். இதற்கு திருமணச் சான்று, கணவரின் ரேஷன் கார்டு, மருமகளின் பெயர் பழைய ரேஷன் ஆடையில் இருந்து நீக்கப்பட்டதற்கான சான்றிதழ், தாய்வழி ரேஷன் கார்டு மற்றும் தாய்வழி ஆதார் அட்டை, அதில் கணவரின் பெயர் உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு குழந்தை பிறந்துள்ளது எனில் அந்த குழந்தையின் பெயரும் ரேஷன் கார்டில் கட்டாயமாக சேர்க்க வேண்டும். இதற்கு பிறந்த குழந்தையின் பிறப்பு சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். அத்துடன் இதற்கு ஆதார் அட்டையின் ஆவணத்தையும் வைத்திருக்க வேண்டும். மேலும் தற்போது புதிய உறுப்பினர் சேர்க்க பல மாநிலங்கள் ஆன்லைன் முறையிலும் மற்றும் நேரடி முறையிலும் செய்யப்பட்டு வருகிறது. இதை நேரடி முறையில் மேற்கொள்ள நீங்கள் விண்ணப்ப படிவத்தை பெற்று தேவையான ஆவணங்களை இணைத்து உணவு விநியோக மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு விரைவில் புதிய புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டு வழங்கப்படும்.

ரேஷன் கார்டில் ஆன்லைன் மூலம் புதிய உறுப்பினர் சேர்ப்பதற்கான வழிமுறைகள்:

  • முதலாவதாக https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும். இந்த இணையதளம் ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபடுகிறது.
  • இதில் பயனாளர் நுழைவு என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இதையடுத்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். அடுத்ததாக கேப்ட்சா எண்ணை கீழே உள்ள கட்டத்தில் கொடுக்க வேண்டும்.
  • அதன் பின்னர் முகப்பு பக்கத்தில் “புதிய உறுப்பினர் பெயர் சேர்க்க” என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது புதிய பக்கம் திறக்கப்படும். இதில் புதிய உறுப்பினரின் தகவல்களை உள்ளிட வேண்டும்.
  • இதையடுத்து விவரங்களை சரியாக நிரப்பிய பிறகு தேவனையான ஆவணங்களின் நகலை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
  • அதன் பிறகு “சமர்ப்பி” என்ற பொத்தானை கிளிக் செய்ய வேண்டும்.
  • இறுதியாக உங்களின் விண்ணப்பம் அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு புதிய புதுப்பிக்கப்பட்ட ரேஷன் கார்டு தபால் மூலம் உங்கள் வீட்டிற்கு டெலிவரி செய்யப்படும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!