தமிழகத்தில் பள்ளிகள் திறக்க அனுமதி – 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு ஜன.31 வரை விடுமுறை!
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதால் தமிழக முதல்வர் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் குறிப்பிட்ட வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
ஜன.31 வரை விடுமுறை:
இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை தொடர்ந்து மூன்றாவது துவக்கமாக தற்போது நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. இந்த வகையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக இரவு ஊரடங்கு மற்றும் வார விடுதி நாட்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்கு முதல்வர் அவர்களின் உத்தரவின் படி ஜனவரி 6ம் தேதி முதல் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு நேற்று முதல் நாள் வரை அமலில் இருந்தது.
நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!
இந்த நிலையில் முதல்வர் அவர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவ குழு சார்பில் கொரோனா தடுப்பு விதிமுறைகள் தீவிரப்படுத்த வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டது. இதன் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 20 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது 1 – 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மற்றும் கல்லூரிகளுக்கு ஜனவரி 31 வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது என முதல்வர் அறிவித்துள்ளார். இந்த வகையில் 1 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் மற்றும் கல்வித் தொலைக்காட்சி மூலம் வகுப்புகள் நடத்தப்படும் மற்றும் பொதுத் தேர்வு எழுத உள்ள 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் பள்ளிகளை திறந்து தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தில் அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடு மற்றும் இரவு ஊரடங்கும் ஜனவரி 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இம்மாத இறுதி வரை அனைத்து கலை, அறிவியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த வகையில் கல்லூரி மாணவர்களுக்கு பருவத் தேர்வு நடத்துவது குறித்து, தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்பட்டு உள்ளது.