சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

0
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னை: திடீரென உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை விலை ஏறி, இறங்கியும் வரும் நிலையில் தற்போது பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

நகைப்பிரியர்கள் அதிர்ச்சி:

தமிழகத்தில் 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இதனால் நகைக்கடை வியாபாரிகளும், ஆபரணத் தங்கத்தில் முதலீடு செய்து தங்கம் வாங்கி சேமிக்கும் முதலீட்டாளர்களும் பாதிக்கப்பட்டனர். மேலும் கொரோனா ஊரடங்கால் கடந்த ஆண்டு திருமணங்கள் பெரிதும் நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று கட்டுக்குள் இருந்ததால் அரசு அனுமதி அளித்து திருமணங்கள் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பொங்கல் சிறப்பு பேருந்திற்கு முன்பதிவு செய்தோர் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு!

இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்தது. இதனால் நகைப்பிரியர்களும், திருமணத்திற்கு தங்கம் வாங்கும் மக்களும் மகிழ்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து இந்த ஆண்டு புத்தாண்டை ஒட்டி ஆபரணத் தங்கம் விலை உயர்ந்தது. இவ்வாறு கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏறி, இறங்கியும் வந்த நிலையில் தற்போது தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது

தமிழகத்தில் ஜன.14 பொங்கல் பண்டிகை – தொழிலாளர்களுக்கு தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.35,792 விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.35,896க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.4,487 ஆக விற்பனையாகிறது. தற்போது சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ.64.600 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!