சென்னை: மீண்டும் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக தங்கத்தின் விலை ஏற்றம் அடைந்து வருவதால் நகைப்பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர். மேலும் நகைகள் வாங்குவதில் பொருளாதார ரீதியாக சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
தங்கம் விலை:
நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா பெருந்தொற்று காரணத்தால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு விதிக்கப்பட்டது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் கடைகள், வணிக வளாகங்கள் போன்றவைகள் மூடப்பட்டது. இதனால் தொழில்கள் முடங்கியதால் முதலீட்டாளர்கள் கடும் பொருளாதார சரிவை சந்தித்தனர். இந்த நேரத்தில் ஏராளமானோர் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர். அனைவரும் தங்கத்தில் முதலீடு செய்ய நேர்ந்தால் தங்கம் விலை எதிர்பாராத அளவு உயர்ந்தது. இதனால் நகைப்பிரியர்கள் தங்க நகைகளை வாங்க முடியாமல் சிரமப்பட்டனர்.
தமிழக ஓய்வூதியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீடு தேடி வரை பென்சன்!
ஊரடங்கு மற்றும் கொரோனா தொற்று போன்றவைகள் சரியாகி இயல்பு நிலை சரியானதும் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்த்து வந்தனர். ஆனால் மக்கள் எதிர்பார்த்த அளவு தங்கத்தின் விலை குறையவில்லை. தங்கத்தை கொள்முதல் செய்வதில் உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2ம் இடத்தில் இருக்கிறது. இந்த நேரத்தில் உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரின் தாக்கத்தால் மீண்டும் தங்கம் விலை உயர்ந்தது. அதனை தொடர்ந்து தற்போது நாட்டில் ரூபாய் மதிப்பு சரிவதால் தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் அதன் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
தற்போது தங்கம் விற்பனைக்கு 3% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதனால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்றைய காலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்ந்து ஒரு சவரன் ரூ.38,480 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது மாலையில் மேலும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி தற்போது ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 48 உயர்ந்து சவரன் ரூ.38,384 -க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,798-க்கு விற்பனையாகிறது. அதே போல சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.64 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.