தமிழக ஓய்வூதியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – வீடு தேடி வரை பென்சன்!
தமிழகத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் தற்போது வீட்டில் இருந்தபடியே வாழ்நாள் சான்றிதழுக்கு பதிவு செய்யலாம். இந்நிலையில், இத்திட்டத்தின் விளைவாக உடனடியாக ஓய்வூதியதாரர்கள் பயனடைந்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வீடு தேடி பென்சன்:
மத்திய, மாநில மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள் எனப் பல தரப்பினரும் மாதந்தோறும் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அவர்கள், உயிருடன் இருக்கிறார்களா என்பதற்கு அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும். அப்படி சமர்ப்பித்தால் மட்டுமே தொடர்ந்து பென்சன் கிடைக்கும். மேலும் கொரோனா காலகட்டத்தில் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி, 2020 மற்றும் 2021 ஆண்டுகளுக்கு வாழ்நாள் சான்றிதழ் பெறுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
TCS நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – புதிய அலுவலகங்கள் அமைப்பு!
இந்த நிலையில், 2022ம் ஆண்டுக்கான வாழ்நாள் சான்றிதழை ஜூலை முதல், செப்டம்பர் மாதத்துக்குள் சமர்ப்பிக்கும்படி ஓய்வூதியதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் அரசு இ-சேவை மற்றும் பொதுச்சேவை மையங்கள் மூலம் ஓய்வூதியர்கள் உரிய கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம். மேலும் ஓய்வூதியர்கள் சங்கத்தின் மூலமாகவும், கைரேகை குறியீட்டுக் கருவி பயன்படுத்தி மின்னணு வாழ்நாள் சான்றிதழ் சமர்ப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, அஞ்சல் துறை வாயிலாக ஓய்வூதியதாரர்களின் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கான சேவை தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் தபால் துறை வங்கி (India Post Payments Bank) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதனால் ஓய்வூதியதார்கள் ஆதார் எண், வங்கி கணக்கு எண், அசல் ஓய்வூதியப் புத்தகம் வாழ்நாள் சான்றிதழ் போன்ற சான்றிதழ்களை பயன்படுத்தி அஞ்சல் துறையின் வங்கி சேவையை பயன்படுத்தி தங்களது இருப்பிடத்தில் இருந்தபடியே தபால் துறை பணியாளர்கள் மூலமாக ரூ.70 கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் சான்று பதிவு செய்துகொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
இதனால் ஓய்வூதியதாரர்கள் பென்சன் பெறுவது எளிதாகும், மேலும் இத்திட்டத்தால் ஓய்வூதியதாரர்கள் உடனடியாக பயனடைந்துள்ளதாக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். பயனடைந்த ஓய்வூதியதாரர்களின் படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் இல்லம் தேடிச் சென்று டிஜிட்டல் சேவையில் பங்கு வகிக்கும் தபால் துறை வங்கிக்கு (India Post Payments Bank) நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.