சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

0
சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை - அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
சென்னை: இன்று அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!

இந்தியாவில் விருப்பமான உலோகங்களில் ஒன்றாக இருக்கும் தங்கம், மக்களின் வாழ்வில், அவர்களின் உணர்வில் கலந்த ஒரு முதலீடாக இருந்து வருகிறது. இது சிறந்த முதலீடு மட்டும் அல்ல, அவசர தேவைக்கு பயன்படுகிறது. இன்றும் பல நடுத்தர குடும்பங்களில் அவசர தேவைக்கு உதவும் என்பதாலேயே மக்கள் தங்கத்தினை வாங்கி வைக்கின்றனர். இந்நிலையில் இன்று ஆபரணத் தங்க விலை சற்று அதிகரித்து உள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை உயர்வு:

நாடு முழுவதும் கடந்த 2 வருடங்களாக கொரோனா, ஓமைக்ரான் பரவல் அதிகரித்தால் அதிக அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இதன் காரணமாக மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர்.அதனால் தற்போது பொதுமக்கள் சேமிப்பில் அதிக முக்கியத்துவம் காட்டி வருகின்றன. இதன் அடிப்படையில் சிறுசேமிப்பு திட்டங்கள் , தங்கம் நகைகள் ஆகியவைகளில் பணங்களை முதலீடு செய்து வருகின்றனர்.இந்த முதலீடுகள் மக்களின் கஷ்ட காலங்களில் மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் பெண்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று, தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தங்கத்தில் முதலீடு செய்தால் பெண் குழந்தைகள் திருமணம் மற்றும் மேற்படிப்பு மிகவும் உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 2ம் தேதி) அரசு பொது விடுமுறை – வலுக்கும் கோரிக்கை!

மேலும் தமிழ்நாட்டு பெண்களின் தங்க நகைகள் மீதான மோகம் மிகவும் அதிகம், இந்நிலையில் தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம்.உக்ரைனில் நடந்துவரும் போர், ரஷ்யா மீதான பொருளாதார தடை போன்ற காரணங்களால் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது. பங்குச்சந்தை சரிவு, பணவீக்கம், பொருளாதார அதிர்வுகளுக்கு இடையே தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதாக முதலீட்டாளர்கள் கருதுகிறார்கள்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பே தங்கத்தின் விலையில் ஏற்றம் காணப்பட்டது. தங்கத்தின் விலை அதிகரித்தாலும் பொதுமக்கள் பெருமளவில் தங்க நகைகளை வாங்கி வருகின்றனர்

Exams Daily Mobile App Download

தங்கம் விலையானது வாரத்தின் முதல் நாளான திங்கள் முதல் விலை இறக்கத்துடனே இருந்து வந்த நிலையில் நேற்றும், இன்று விலை அதிகரித்துள்ளது. தங்கத்தின் விலையானது உயர்ந்துள்ள நிலையில், வெள்ளியின் விலை சற்று உயர்ந்தே காணப்படுகின்றது. இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.48 உயர்ந்து, ரூ.39,224-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.6 உயர்ந்து, ரூ.4,903 க்கு விற்பனையாகிறது. தங்கத்திற்கு இணையாக வாங்கப்படும் வெள்ளியின் விலை,சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூ.69.50க்கு விற்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!