தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 2ம் தேதி) அரசு பொது விடுமுறை – வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 2ம் தேதி) அரசு பொது விடுமுறை - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 2ம் தேதி) அரசு பொது விடுமுறை - வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் நாளை மறுநாள் (மே 2ம் தேதி) அரசு பொது விடுமுறை – வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் மே 3ம் தேதி அன்று ஈகை பெருநாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதனால் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அன்றைய தினம் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மே 2ம் தேதியும் பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கோரிக்கை வைத்துள்ளார்.

ரமலான் பண்டிகை

உலகம் முழுவதும் ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருந்து அந்த மாதத்தில் வரக்கூடிய அமாவாசையை தொடர்ந்து வரக்கூடிய மூன்றாம் பிறை அன்று புனித ரமலான் தினமாக கொண்டாப்படுகிறது. இந்த தினத்தில் இஸ்லாமியர்களின் வழக்கமாக மசூதியில் தொழுகை நடத்தாமல் ஒரு பெரிய திடலில் இஸ்லாமியர்கள் அனைவரும் கூடி தொழுகை நடத்தி சிறப்பாக கொண்டாடுவார்கள். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் அனைவரும் 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். இந்த நோன்பு பிறரின் கஷ்டத்தையும், பசியையும் உணர்வதற்காக மேற்கொள்ளப்படுகிறது.

TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – நடப்பு நிதியாண்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு!

அதனால் இந்த நாளில் ஏழை, எளியோருக்கு உணவை பகிர்வதும், அத்துடன் இல்லாதவர்களுக்கு பொருள் கொடுத்து உதவுவார்கள். தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகை வருகிற மே 3ம் தேதி அன்று கொண்டாடப்பட உள்ளது. அதனால் இத்தினத்தை அரசு பொது விடுமுறையாக அளித்துள்ளது. மேலும் இன்று (ஏப்.30), மே 1,3ம் தேதிகளில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி மே 2ம் தேதி மட்டும் வேலை நாளாக இருப்பதால் பல்வேறு தரப்பினர் மே 2ம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

மேலும் இது குறித்து மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். இவர் தனது கடிதத்தில் கூறியதாவது, தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மே 3ம் தேதி அன்று பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மே 2ம் தேதி அன்றும் விடுமுறை அளித்து மற்றொரு நாளை வேலை நாளாக அறிவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதன்படி தொடர் விடுமுறை அளித்தால் சொந்த ஊர் செல்லும் ஊழியர்கள் மற்றும் மாணவர்களும் சிறப்பாக ரம்ஜான் பண்டிகையை கொண்டாடுவார்கள் என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!