TCS & Infosys நிறுவன ஊழியர்கள் கவனத்திற்கு – நடப்பு நிதியாண்டில் 90,000 பேருக்கு வேலைவாய்ப்பு!
தற்போது துவங்கி இருக்கும் 2022-23ம் நிதியாண்டில் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை சுமார் 90,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை அளிக்க இருப்பதாக தகவல் அளித்துள்ளது.
IT வேலைவாய்ப்புகள்
இந்தியாவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கத்திற்கு மத்தியில், முன்னணி IT நிறுவனங்கள் பலவும் ஆயிரக்கணக்கான புதியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை அளித்து சாதனை நிகழ்த்தி இருக்கிறது. அந்த வகையில் கடந்த நிதியாண்டில் மட்டும் டிசிஎஸ், இன்ஃபோசிஸ், HCL, காக்கினிசன்ட் ஆகியவை சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பளித்துள்ளது. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் அதிகரிக்கப்பட இருப்பதாக இந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது. தொற்றுநோய்க்கு மத்தியில் டிஜிட்டல் திறன்கள் மற்றும் திறமைகளுக்கான தேவை அதிகரிக்க வலுவான செயல்திறன் காரணமாக, டிசிஎஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகியவை நடப்பு நிதியாண்டில் 90,000 பேரை வேலைக்கு அமர்த்த திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல் ? பொதுமக்களுக்கு விளக்கம் அளித்த அரசு!
இதில் டிசிஎஸ் 40,000 ஊழியர்களை பணியமர்த்த திட்டமிட்டுள்ள நிலையில், இன்ஃபோசிஸ் 50,000 பேருக்கு மேல் பணியமர்த்த உள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனங்களின் தேய்வு விகிதத்தைப் பொறுத்தவரை, இன்ஃபோசிஸ் அட்ரிஷன் விகிதம் மார்ச் 2022 காலாண்டில் 27.7 சதவீதமாக உயர்ந்தது. இதுவே டிசிஎஸ் அட்ரிஷன் விகிதம், டிசம்பர் 2021 காலாண்டில் 25.5 சதவீதத்திலிருந்து அதிகரித்து இப்போது 17.4 சதவீதமாக உள்ளது. இருப்பினும், TCS மற்றும் Infosys இரண்டிலும் தற்போதைய தேய்வு விகிதம் படிப்படியாக குறைந்து வருவதாக தகவல்கள் கூறுகிறது. மறுபுறம், 2022-23ம் நிதியாண்டில் மேலும் 50,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளதாக இன்ஃபோசிஸ் தெரிவித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது குறித்து இன்ஃபோசிஸ் தலைமை நிதி அதிகாரி நிலஞ்சன் ராய் கூறும்போது, ‘கடந்த ஆண்டில், இந்தியா மற்றும் உலகளவில் 85,000 புதியவர்களை பணியமர்த்தியுள்ளோம். குறைந்தபட்சம் 50,000 பேருக்கு மேல் இந்த ஆண்டு பணியமர்த்த திட்டமிட்டுள்ளோம். ஆனால் அது எப்படி நடக்கிறது என்பதைப் பார்ப்போம். இது வெறும் ஆரம்ப புள்ளிவிவரங்கள் மட்டுமே’ என குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில், டிசிஎஸ் தலைமை இயக்க அதிகாரி என் ஜி சுப்ரமணியம், ‘நிறுவனம் இந்த ஆண்டு 40,000 விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதை இலக்காகக் கொண்டு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு தொழில் வளர்ச்சியில் முன்னேறும் போது அந்த எண்ணிக்கை முன்னேறும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.