சென்னை: மீண்டும் உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!
நாளுக்கு நாள் ஆபரணத் தங்கத்தின் விலை பல மடங்காக உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,344 க்கு விற்பனையான நிலையில் ஒரே நாளில் ரூ.328 அதிகரித்துள்ளது. மேலும் மேலும் தங்கத்தின் விலை அதிகரித்து வருவதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை:
கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்துகொண்டும், குறைந்து கொண்டுமாய் இருக்கிறது. தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நகைப் பிரியர்களுக்கு தங்கத்தின் மீது உள்ள ஆசை மட்டும் குறைவதே இல்லை. பெரும்பாலும் இல்லத்தரசிகள் தங்கத்தில் முதலீடு செய்வதை தான் விரும்பி வருகின்றனர். தங்கத்தில் முதலீடு செய்வதை தான் புத்திசாலித்தனமாக எண்ணுகின்றனர். இந்த கொரோனா காலகட்டத்தில் மட்டுமே தங்கத்தின் விலை பல ஆயிரங்கள் அதிகரித்து மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாகியது.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – எச்சரிக்கை பதிவு!
ரஷ்யா மற்றும் உக்ரைன் போராலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நகைப் பிரியர்கள் மிக அதிக அளவில் மனக் கஷ்டத்தில் உள்ளனர். அந்நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி பாதிப்படைந்து பங்குச்சந்தை நிலவரம் சரிவடைந்ததால் இத்தகைய நிலைமை நகைப்பிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.38,344 க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,793 க்கு விற்பனையானது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.328 உயர்ந்து ரூ.38,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.41அதிகரித்து ரூ.4,834 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வெள்ளியின் விலை நேற்று ரூ.71.30 க்கு விற்பனையான நிலையில் இன்று 40 காசு உயர்ந்து ரூ.71.70 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மீண்டும் தங்கத்தின் விலை உயரத் தொடங்கியதால் மக்கள் கவலையில் உள்ளனர்.