தமிழக பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு – இன்றே (ஜூலை 29) கடைசி நாள்!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான பொறியியல் கலந்தாய்விற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் (ஜூலை 28) கால அவகாசம் முடிவடைந்த நிலையில், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய இன்றுடன் (ஜூலை 29) கால அவகாசம் முடிவடைகிறது.
மாணவர் சேர்க்கை
தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்கு கடந்த ஜூன் மாதம் தேர்வு முடிவுகள் முடிவடைந்த வெளியான, மாணவர்கள் உயர்கல்வி பயில விண்ணப்பித்து வருகின்றனர். மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 12 ஆம் வகுப்பு மாணவ மாணவியருக்கு சென்ற வாரம் தான் முடிவுகள் வெளியானது. இந்நிலையில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் சுமார் 440 க்கு மேற்பட்ட கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அதில் ஆண்டுதோறும் இளநிலை படிப்பிற்கு 1.5 லட்சம் இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் நிரப்பப்படுகின்றன. இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் ஆகஸ்ட் 16 முதல் அக்டோபர் 14 ஆம் தேதி வரை நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் அதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த ஜூன் 20 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு நேற்று முன்தினம் வரை முடிவடைந்துள்ளது.
23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகள் இணையத்தில் இனி இலவசம் – UGC அறிவிப்பு
அதில் மொத்தம் 2 லட்சத்து 11,905 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதுவரை விண்ணப்பித்துள்ளவர்களில் 1.69 லட்சம் பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், 1.58 லட்சம் பேர் தங்களின் அசல் சான்றிதழ்களை முழுமையாக பதிவேற்றியுள்ளனர். மீதமுள்ள மாணவர்கள் பதிவுக் கட்டணம் செலுத்தவும், சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் இன்றுடன் (ஜூலை 29) கால அவகாசம் முடிவடைகிறது. அதனால் மாணவர்கள் விரைவாக பதிவேற்றம் செய்ய வேண்டும். இது குறித்து கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணையத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.