23 ஆயிரம் உயர்கல்வி படிப்புகள் இணையத்தில் இனி இலவசம் – UGC அறிவிப்பு!
மாணவர்களுக்கு புதிய இணையதளம் வழியாக இலவசமாக உயர்கல்வி வழங்க பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) திட்டமிட்டுள்ளது. கிட்டத்தட்ட 23 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படிப்புகள் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி படிப்பு:
தற்போது வளர்ந்து வரும் கல்வியாண்டில் தேசிய கல்விக் கொள்கை மாணவர்களுக்கு இலவசமாக கல்வி வழங்க வேண்டும் என்பதனை நோக்கமாக வைத்திருக்கிறது. அதாவது, மாணவர்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு 23 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை புதிய இணையதளம் ஒன்றின் வழியாக இலவசமாக வழங்கி வருகிறது. அதாவது, செயற்கை நுண்ணறிவு, இணையப் பாதுகாப்பு மற்றும் குழந்தைப் பருவப் பராமரிப்பு முதலான 23,000 க்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகள் இந்த இணையதளத்தில் இலவசமாக கிடைக்கும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த தேசிய கல்விக் கொள்கை தற்போது இரண்டாம் ஆண்டின் ஒரு பகுதியாக நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் உயர்கல்விக்கான அணுகலை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதாவது, தேசிய கல்விக் கொள்கையின் இரண்டாம் ஆண்டின் நிறைவையொட்டி இன்று முதல் 23,000க்கும் மேற்பட்ட உயர்கல்வி படிப்புகளை வழங்கும் இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புதிய திட்டத்திற்காக பல்கலைக்கழக மானியக் குழு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைந்துள்ளது.\
ரேஷன் அட்டைதாரர்களுக்கான ஷாக் தகவல் – 2 கோடி கார்டுகள் ரத்து
மேலும், இந்த புதிய திட்டத்திற்காக 7.5 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள் (CSC) மற்றும் சிறப்பு நோக்க வாகன (SPV) மையங்களுடன் மின் வளங்களை ஒருங்கிணைத்துள்ளனர். மேலும், இந்த புதிய கல்விமுறை திட்டத்தின் வாயிலாக ஆங்கிலம் மற்றும் பிராந்திய மொழிகளில் மாணவர்களுக்கு உயர்கல்வி வழங்கப்படும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காகவே கிராம பஞ்சாயத்துகளில் 2.5 லட்ச பொது சேவை மையங்கள் மற்றும் நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான பொது சேவை மையங்கள் இயங்கி வருகின்றன.