தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு – நாளை (செப். 29) ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழகத்தில் 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அக். 10 ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு நடைபெற இருப்பதாக தேர்வுத் துறை அறிவித்துள்ள நிலையில், அதற்கான ஹால்டிக்கெட் நாளை (செப். 29) வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்:
தமிழகத்தில் தனித் தோ்வா்களுக்கான எட்டாம் வகுப்பு பொதுத் தோ்வு குறித்த அறிவிப்பை அரசுத் தேர்வுகள் துறை இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. சில குறிப்பிட்ட காரணங்களால் பள்ளிக்கு நேரடியாக செல்ல முடியாதவர்கள், பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள், மீண்டும் படிக்க ஆசைப்படும் பொருட்டு அரசு இந்த வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற அக்.10 ஆம் தேதி முதல் அக்.14 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் இந்த தேர்வுக்கான அனுமதி சீட்டுகள் குறித்த அறிவிப்பை அரசு தேர்வுத்துறை இயக்குனர் சா. சேதுராமவர்மா வெளியிட்டுள்ளார். அதில் அரசின் 8 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கு ஹால்டிக்கெடுகள் செப். 29 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார். தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.h என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழகத்தில் இத்தனை ஏரியாக்களில் நாளை (செப். 29) மின்தடை – முழு விவரம் இதோ!
Exams Daily Mobile App Download
ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்ய, பதிவு எண், பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து, தேர்வர்கள் தங்களுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். தேர்வின் போது அனுமதி சீட்டு இல்லாதவர்களுக்கு அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொதுத்தேர்வுக்கான விரிவான அட்டவணை மற்றும் கூடுதல் தகவல்கள் குறித்த விவரங்களை அரசின் அதிகாரபூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்