ரயில் பயணிகளின் கவனத்திற்கு.. இனி அனைத்து தகவலையும் வாட்ஸ் அப்பில் பெறலாம் – சூப்பர் வழி வந்தாச்சு!
இந்திய ரயில்வே துறையில் நாள்தோறும் லட்சக்கணக்கானோர் பயணம் மேற்கொள்கின்றனர். இதையடுத்து தற்போது பயணிகளின் வசதிக்காக பல்வேறு அப்டேட்களை ரயில்வே துறை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
Railofy செயலி:
இந்தியாவில் ரயில் போக்குவரத்து சேவை சாமானிய மக்களுக்கு கிடைக்கும் வகையில் மிகவும் மலிவான விலையில் அரசு வழங்கி வருகிறது. இதனால் இந்த சேவை பொதுமக்களிடேயே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இந்தியத் தொடர்வண்டி உணவு வழங்கல் மற்றும் சுற்றுலாக் கழகம் (IRCTC) இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமாக இயங்கி வருகிறது. இந்நிறுவனம் பயணிகளுக்கு உணவு வழங்கல், இணையவழி பயணச்சீட்டு பதிவு, சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட சேவைகளை வழங்கி வருகிறது.
தற்போது வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் முறையிலும் நீங்கள் டிக்கெட்டுகளை புக் செய்ய IRCTC ஆப் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலமாக நீங்கள் வீட்டில் இருந்தவாறு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் மின்னணு அடிப்படையில் கேட்டரிங் சேவைகளை வழங்க உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த இ-கேட்டரிங் சேவையை பெற டிக்கெட் முன்பதிவு செய்யும் போது பயணச்சீட்டுற்கும் உணவுக்கும் சேர்த்து பணம் செலுத்த வேண்டும். இதையடுத்து தற்போது மற்றொரு வசதியும் ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது.
Exams Daily Mobile App Download
அதாவது உங்களின் PNR ஸ்டேட்டஸ் குறித்த விவரத்தை உடனே அறிந்து கொள்ளவும் வசதிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் ரயில் புறப்படும் நேரம், PNR ஸ்டேட்டஸ் உள்ளிட்ட விவரங்களை பயணிகள் வாட்ஸ் ஆப் வாயிலாகவே பெற்று கொள்ளலாம். இந்த வசதியை பெற Railofy செயலியின் 9881193322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு PNR எண்ணை அனுப்ப வேண்டும். இப்போது உங்கள் எண்ணிற்கு ரயில் புறப்படும் நேரம், PNR ஸ்டேட்ட உள்ளிட்ட அனைத்து விவரங்களும் அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமாக ரயில்களை தவற விடாமல் நீங்கள் பயண செய்யமுடியும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்