தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விதிமுறைகள் – விரைவில் வெளியீடு!!
கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி ஆல்பாஸ் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விதிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ம் வகுப்பு மாணவர்கள்:
தமிழகத்தில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த மாதம் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களிடம் கொரோனா நோய்த்தொற்று மிக அதிகமாக கண்டறியப்பட்டது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்புகள் வரை மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை என்று அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
மேலும் 10 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்து தேர்வின்றி அனைவரும் ஆல் பாஸ் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களை 11ம் வகுப்பு அல்லது பாலிடெக்னிக்கில் சேர்ப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிகளில் மதிப்பெண் சான்றிதழை கேட்டு வருகின்றனர். தேர்வின்றி மாணவர்கள் தேர்ச்சி பெற்றதால் மதிப்பெண் சான்றிதழை வழங்க சிரமம் ஏற்பட்டது.
இந்தியாவில் ஒரே நாளில் 1.26 லட்சம் பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை தகவல்!!
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழை வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி மாணவர்களின் கற்றல் திறனை கருத்தில் கொண்டு மதிப்பிடலாமா? அல்லது 9 ஆம் வகுப்பில் நடந்த தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சராசரியாக கணக்கிடலாமா? என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இது குறித்து விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.