தமிழக 10 & 12 ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

0
தமிழக 10 & 12 ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக 10 & 12 ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு - அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
தமிழக 10 & 12 ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் கவனத்திற்கு – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வுகள் வரும் ஜூலை 25ம் தேதி அன்று நடத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் துணைத்தேர்வு குறித்து மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் நிகழ்ச்சி ஒன்றில் அறிவுரை வழங்கியுள்ளார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவுரை:

தமிழகத்தில் கொரோனா எதிரொலியாக, கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவில்லை. ஆனால் 2021- 2022 கல்வி ஆண்டில் பொதுத்தேர்வு கட்டாயம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பள்ளி நேரடி வகுப்புகள் தாமதமாக தொடங்கியது. இதனால் 10 முதல் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெற்றது. மேலும் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு கடந்த மாதம் வெளியானது. இந்த முடிவுகளின் அடிப்படையில், 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு துணைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. இதன் அடிப்படையில் 2021-22-ஆம் கல்வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு வருகிற 25-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் (ஆகஸ்ட்) 8-ந் தேதியும் துணை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மேலும் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஜூலை 4 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2 முதல் 10ம் தேதி வரைக்கும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2 முதல் 8 வரைக்கும் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.

தென்காசியில் 21ம் தேதி (நாளை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

அதன்படி வரும் ஜூலை 25ம் தேதி அன்று துவங்க இருக்கும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு ஹால் டிக்கெட் இன்று (ஜூலை 20) வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் வேலூர் நிகழ்ச்சி ஒன்றில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத் தேர்வு குறித்து பேசியுள்ளார். அதாவது பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஊக்கம் அளித்து நடைபெற உள்ள துணைத் தேர்வில் பங்கேற்க வைக்க வேண்டும் என்று கூறினார். இதை தொடர்ந்து பள்ளிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும், மாஸ்க் அணிதலை மறவாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

PSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!