தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ. 1 லட்சம் அபராதம் – உச்சநீதிமன்றம் உத்தரவு!
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் இருப்பதாக தொடங்கப்பட்ட வழக்கில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.
நீதிமன்றம் உத்தரவு:
தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிந்து வருவோருக்கு ஓய்வூதிய பலன்கள் உள்ளிட்டவை சரியாக வழங்கப்பட வேண்டும். ஆனால் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் துப்புரவு தொழிலாளர்களுக்கு ஓய்வூதிய பலன்களை வழங்காமல் வழக்குகள் மூலம் இழுத்தடிக்க முயற்சி செய்வதாக கூறி தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.1லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் இந்த ஒரு லட்சம் அபராதத்தை உச்சநீதிமன்ற பணியாளர் சங்க நல நிதிக்கு 4 வாரத்தில் தமிழக அரசு செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இதே போல சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.