தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வு தேர்ச்சி கட்டாயமாகும். இந்நிலையில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழின் உண்மைத்தன்மையை அந்தந்த மாவட்டங்களிலேயே சரிபார்க்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
டெட் தேர்வு:
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின்படி அனைத்து விதமான பள்ளிகளிலும் இடை நிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும். இந்நிலையில் டெட் தேர்வர்கள் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை அந்தந்த மாவட்டங்களிலேயே சரிபார்க்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இது குறித்து ஆசிரியர் தேர்வுவாரியம், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், 2012ஆம் ஆண்டு நடந்த டெட் தேர்வில் பங்கேற்றவர்களின் விவரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டன. அதில் சான்றிதழ்களின் உண்மை தன்மையை குறிக்கும் கருத்துக்களுக்கு தங்கள் மாவட்டத்தில் டெட் தேர்வு எழுதிய நபர்களின் விவரங்களுடன் சரிபார்த்து அதை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இந்த அறிக்கையை தொடர்ந்து 2012, 2013, 2017 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற டெட் தேர்வுகளுக்கான சான்றிதழ் திருத்தங்கள், உண்மைத் தன்மை அறிதல் ஆகியவை அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும் இது தொடர்பாக மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தல்கள் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.