அதிரடியாக பிறப்பிக்கப்பட்ட தடை.. ஜனவரி 10ம் தேதி வரை மாநிலத்தில் 144 உத்தரவு அமல்!
மாநிலத்தில் வர இருக்கும் பண்டிகையை கருத்தில் கொண்டு ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்
நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து உள்ள நிலையில் அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது அனைத்து மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. இந்த நிலையில் உத்தர பிரதேசத்தில் ஜனவரி 10ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதாக அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது வருகிற 25ம் தேதி அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையும், வருகிற 29ம் தேதி அன்று குரு கோவிந்த் சிங் ஜெயந்தியும் மற்றும் வர இருக்கும் ஜனவரி 1ம் தேதி அன்று புத்தாண்டை முன்னிட்டும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது. இந்த நிகழ்ச்சிகள் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவு!
Exams Daily Mobile App Download
அத்துடன் இந்த பண்டிகை நாட்களை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடானது பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 144 தடை பல்வேறு கட்சித் தொண்டர்கள் மற்றும் பல்வேறு போராட்டக்காரர்கள் ஆகியவை அனுமதியின்றி பேரணி நடத்துவதை தடுப்பதற்காகவும் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.