மாநாடுகள் – ஏப்ரல் 2019
இங்கு ஏப்ரல் 2019 மாதத்தின் மாநாடுகள் – ஏப்ரல் 2019 பற்றிய விவரங்களை வழங்கியுள்ளோம். இதை படித்தால் UPSC, TNPSC, SSC, RRB தேர்வுகளில் பொது அறிவு – நடப்பு நிகழ்வுகள் பிரிவில் கேட்க படும் கேள்விகளுக்கு எளிதில் பதில் அளிக்கலாம்.
ஏப்ரல் மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download
மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Quiz PDF – ஏப்ரல் 2019
சர்வதேச மாநாடுகள்:
இந்தியா-உக்ரைன் IU-WGTEC இன் 4 வது கூட்டம்
- இந்தியா-உக்ரைன் வர்த்தக மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான செயல் குழுவின் (IU-WGTEC) 4-வது கூட்டம் புது தில்லியில், ஏப்ரல் 02, அன்று நடைபெற்றது.
- இந்திய பிரதிநிதியாக பிட்யூட் பெஹரி ஸ்வைன் (Bidyut Behari Swain), வெளிநாட்டு வர்த்தக கூடுதல் செயலாளர், (சிஐஎஸ்) மற்றும் உக்ரேனிய பிரதிநிதியாக சைட் திரு. ஒலெக்ஸியோ ரோச்கோவ்வும் (Oleksiy Rozhkov) பங்குபெற்றனர்.
இந்தியா – நேபாளம் முதலீட்டு உச்சி மாநாட்டு – மே மாதம் நடைபெறும்
- நேபாளத்தின் வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (FNCCI) மே மாதம் காத்மாண்டுவில் நேபாள முதலீட்டு உச்சிமாநாடு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
இந்தியா – இத்தாலி இடையே வழக்கமான தூதரக உரையாடலை நடத்த முடிவு
- இந்தியாவும் இத்தாலியும் வழக்கமான தூதரக உரையாடலை நடத்துவதற்கு ஒப்புக் கொண்டுள்ளன. 7 வது வெளிநாட்டு அலுவலக ஆலோசனைக் கூட்டத்தில் (FOC) இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
7வது சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி ஷாங்காய் நகரில் தொடங்கியது
- ஷாங்காய் நகரில் 7-வது சீன சர்வதேச தொழில்நுட்ப கண்காட்சி துவங்கியது, இந்த கண்காட்சி தேசிய அளவிலான சர்வதேச தொழில்நுட்ப வர்த்தகத்தில் கவனம் செலுத்தியது. 35,000 சதுர மீட்டர் பரப்பளவில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தொழில்முறை தொழில்நுட்பங்கள், தொழில் நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் வர்த்தக சேவைகள் உள்ளிட்ட ஐந்து கண்காட்சிப் பகுதிகளை கொண்டுள்ளது.
தேசிய மாநாடுகள்:
GRIDTECH 2019
- இந்திய துணைத் ஜனாதிபதி திரு. வெங்கையா நாயுடு GRIDTECH 2019 கண்காட்சியை தொடங்கிவைத்தார். இது பவர் கிரிட் கார்ப்பரேசனால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாடு ஆகும்.
உலக ஹோமியோபதி தினத்தின் சர்வதேச மாநாடு
- உலக ஹோமியோபதி தினத்தையொட்டி புது தில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் 2019 ஏப்ரல் 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் உலக ஹோமியோபதி தினத்தின் சர்வதேச மாநாட்டை ஹோமியோபதியின் மத்திய ஆராய்ச்சி மையம் (CCRH) ஏற்பாடு செய்துள்ளது.
- ஹோமியோபதி முறையின் நிறுவனரான டாக்டர் கிறிஸ்டியன் ஃப்ரெட்ரிச் சாமுவேல் ஹன்மான்மன் பிறந்த நாள் நினைவாக உலக ஹோமியோபதி தினம் அனுசரிக்கப்படுகிறது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021 க்கான தரவு பயன்பாட்டார்களின் மாநாடு
- 140 ஆண்டுகள் கால மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்றில் முதன்முறையாக, மொபைல் பயன்பாடு மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட முயற்சி என இந்திய பதிவாளர் ஜெனரல் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர், மற்றும் தகவல் சேர்க்க பயன்படும் முயற்சி வியூகங்கள் மற்றும் பெறவேண்டிய தகவல் சம்மந்தமான கேள்விகள் குறித்த தரவு பயன்பாட்டார்களின் மாநாடு.
நிதி ஆயோக் மற்றும் 15வது நிதி ஆணையம் இடையிலான 2வது கூட்டம்
- செயல்திறன் அடிப்படையிலான மானியங்கள் வழங்குதல் பற்றிய பதினைந்தாம் நிதி ஆணையத்தின் உடனான 2 வது கூட்டத்தை NITI அயோக் புது தில்லியில் ஏற்ப்பாடு செய்தது, இதில் நிதி ஆயோக் துணை தலைவர் டாக்டர் ராஜீவ் குமார், 15வது நிதி ஆணைய தலைவர் ஸ்ரீ என்.கே. சிங், உறுப்பினர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இழப்பு மற்றும் சேதம் பற்றிய தேசிய பணிமனை
- புது தில்லியில், காலநிலை தொடர்பான இழப்பு, சேதம் மதிப்பீடு, சேதம் குறைக்கும் முயற்சி மற்றும் முகவரி அணுகுமுறைகள் மீது வளர்ந்து வரும் முன்னோக்குகளில் ஒரு நாள் தேசிய ஆலோசனை பணிமனையை பிரதமரின் கூடுதல் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே. மிஸ்ராவின் தலைமையில் சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் நடத்தியது.
வேளாண் விரிவாக்கத்திற்கான தேசிய மாநாடு
- புது தில்லியில் விவசாய மேம்பாட்டுக்கான தேசிய மாநாட்டில் இந்திய வானிலை ஆய்வுத் துறை துணை இயக்குநர் ஜெனரல், எஸ்.டி. அட்ரி, ஆய்வுத்துறை மூலமாக வானிலை தொடர்பான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கியதால் நாடு முழுவதும் விவசாய உற்பத்தி அதிகரித்து அதிக விளைச்சலைக் கொடுத்துள்ளதாகக் கூறினார்.
‘நீர்வள வேலைகளில் தொழில்நுட்ப நெசவுகளைப் பயன்படுத்துதல்‘கருத்தரங்கு
- புது டில்லியில் நீர்வள ஆதாரங்கள், நதி வளர்ச்சி மற்றும் கங்கை புத்துயிர் அமைச்சகம், நீர்வள வேலைகளில் தொழில்நுட்ப நெசவுகளைப் பயன்படுத்துதல்’ தொடர்பான ஒருநாள் தொழில்நுட்ப கருத்தரங்கை ஏற்பாடு செய்யதுள்ளது. இந்த கருத்தரங்கில் CWC தலைவரான ஸ்ரீ மசூத் ஹுசைன் தலைமை தாங்கினார்.
PDF Download
To Read in English: Click Here