பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிப்பு – அரசு திடீர் உத்தரவு!

0
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிப்பு - அரசு திடீர் உத்தரவு!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிப்பு - அரசு திடீர் உத்தரவு!
பள்ளிகளுக்கு கோடை விடுமுறை ஜூன் 26ம் தேதி வரை நீட்டிப்பு – அரசு திடீர் உத்தரவு!

மாநிலத்தில் நிலவும் அதீத வெப்ப காற்று காரணமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை நீட்டித்து மேற்கு வங்க மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அரசு இம்முடிவை எடுத்து உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கோடை விடுமுறை நீட்டிப்பு:

கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. மேலும் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா தாக்கம் குறையத் தொடங்கியதால், கல்வி நிறுவனங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியது. அதனை தொடர்ந்து பல மாநிலங்களில் பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வுகளும் நடத்தப்பட்டு, முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் ஏப்ரல் மாத தொடக்கத்திலேயே வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டதால், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் கோடை விடுமுறை முன்னதாக அறிவிக்கப்பட்டது.

TN Job “FB  Group” Join Now

இதையடுத்து கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்கான வகுப்புகள் தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நிலவும் கடும் வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை ஜூன் 26-ம் தேதி வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெளியிட்ட அறிக்கையில், நாடு முழுவதும் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேற்கு வங்க மாநில அரசு கோடை விடுமுறையை ஜூன் 26, 2022 வரை நீட்டித்துள்ளது.

தமிழக பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் கவனத்திற்கு – மறுதேர்வு எப்போது? அமைச்சர் அறிவிப்பு!

மேலும் மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளர் மணீஷ் ஜெயின் குறிப்பிட்டுள்ளார். கடும் வெப்பம் காரணமாக பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக, வெப்பம் மற்றும் ஈரப்பதம் காரணமாக ஒரு சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக தகவல் கிடைத்துள்ளதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறை உத்தரவை பெற்றோர்களும், மாணவர்களும் வரவேற்றுள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!