நாளை (மே 11) முதல் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை – மாநில அரசு முடிவு!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் நாளை (மே 11) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முன்னதாக மே 17ம் தேதி முதல் துவங்க திட்டமிடப்பட்டது.
கோடை விடுமுறை
சமீப காலமாக நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயில் மற்றும் வெப்பத்தால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் உட்பட பலரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை சில மாநில அரசுகள் முன்கூட்டியே அறிவித்து வருகிறது. அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பள்ளி மாணவர்களுக்கும் கோடை விடுமுறை குறித்த சூப்பர் அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது, பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறையை மே 11 முதல் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது.
Exams Daily Mobile App Download
இது தொடர்பாக இடைநிலைக் கல்வி வாரிய இயக்குநர் கௌரவ் அகர்வால் பிறப்பித்த உத்தரவின்படி, ‘மே 11 புதன்கிழமை முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது. கல்வித்துறையின் இந்த உத்தரவால் வெப்பநிலையால் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளுக்கு நிம்மதி கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் இதுவரை ஆசிரியர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயரும் EMI தொகை – வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஷாக் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
இதனால், ஆசிரியர்கள் அனைவரும் தவறாமல் பள்ளிக்கு வர வேண்டும் என்றும் பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் தேர்வு முடிவுகளை தயார் செய்வதோடு வரவிருக்கும் கல்வியாண்டுக்கும் தயாராக வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே மாதம் 17ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட இருந்தது. ஆனால், மாநிலத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த விடுமுறை மே 11க்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.