உயரும் EMI தொகை – வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஷாக் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

0
உயரும் EMI தொகை - வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஷாக் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
உயரும் EMI தொகை - வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஷாக் அறிவிப்பு! முழு விபரம் இதோ!
உயரும் EMI தொகை – வங்கியில் கடன் பெற்றவர்களுக்கு ஷாக் அறிவிப்பு! முழு விபரம் இதோ!

நாட்டில் கடந்த சில நாட்களாக பணவீக்கம் கடுமையாக உயர்ந்துள்ளதால் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. அதன்படி இதற்காக கூட்டம் நடத்தப்பட்டு வட்டி விகிதத்தை 4.40% ஆக உயர்த்தியுள்ளது. அதனால் பல்வேறு வங்கிகளும் தங்களின் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றனர். தற்போது ஒவ்வொரு வங்கியிலும் உயர்த்தப்பட்டுள்ள வட்டி விகிதத்தை பற்றி விரிவாக பார்ப்போம்.

வட்டி விகிதம் உயர்வு

இந்தியாவில் செயல்பட்டு வரும் பொதுத்துறை, தனியார் உள்ளிட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்பட்டு வருகிறது. இதில் வங்கிகளுக்கு நிதி பற்றாக்குறையாக உள்ள சூழலில் ரிசர்வ் வங்கியிடம் பணத்தை கடன் பெறுகிறது. இந்த கடன் தொகைக்கு விதிக்கப்படும் வட்டிதான் ரெப்போ வட்டி விகிதம் என்று கூறப்படுகிறது. பொதுவாக நாட்டில் பணவீக்கம் ஏற்படும் போது இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி தனது ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தும். இது ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்ற அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்.

Exams Daily Mobile App Download

இந்த ரெப்போ வட்டி உயர்வு வங்கிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும். வங்கிகள் இந்த சுமையை வாடிக்கையாளர்கள் மீது தான் சுமத்தும். அதன்படி இப்போது பெரும்பாலான வங்கிகளில் கடன் வழங்கப்படும் அடிப்படை வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் மேலும் கூடுதலான வட்டி தொகையை செலுத்த வேண்டியிருக்கும். அதன்படியே தற்போது ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம். இதில் ஐசிஐசிஐ வங்கி மே 4ம் தேதி முதல் அடிப்படை வட்டியை 8.10% ஆக உயர்த்தியுள்ளது.

மதுரை தமுக்கத்தில் அரசு பொருட்காட்சி – மே 14 முதல் 45 நாட்களுக்கு நடத்த முடிவு!

இதே போல் பேங்க் ஆப் பரோடாவில் வட்டி விகிதம் 6.90% என மே 5ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. கனரா வங்கியில் வட்டி விகிதம் 7.30% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனை மே 7ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கி வட்டி விகிதத்தை 6.80% ஆகவும், பஞ்சாப் நேஷனல் வங்கி தனது அடிப்படை வட்டி விகிதத்தை 6.90% ஆகவும் அதிகரித்துள்ளது. இதே போல் பேங்க் ஆப் இந்தியா வங்கி மே 4ஆம் தேதி முதல் 7.25% ஆகவும் உயர்த்தியுள்ளது. இதனால் வங்கியில் கடன் பெற்ற வாடிக்கையாளர்கள் கூடுதலான EMIயை கட்ட வேண்டியிருக்கும்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!