அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை – அரசுக்கு பரிந்துரை!
மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு மே 2 முதல் ஜூன் 13 வரை கோடை விடுமுறை அளிப்பது குறித்த முன்மொழிவை முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்கள் முதன்மைச் செயலருக்கு அனுப்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை
மாநிலத்தில் கோடை விடுமுறை மற்றும் புதிய கல்வியாண்டு தொடங்குவதற்கான காலக்கெடு தொடர்பாக மஹாராஷ்டிரா மாநில கல்வி இயக்குனரகம் அரசுக்கு முன்மொழிந்துள்ளது. இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகள் மே 2 அன்று கோடை விடுமுறைக்கு மூடப்பட்டு ஜூன் 13 அன்று புதிய கல்வியாண்டிற்கு மீண்டும் தொடங்கும். இதற்கான இறுதி ஒப்புதல் முதன்மைச் செயலரிடம் இருந்து கிடைக்கும் என்று தற்போது எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சென்னையில் அதிரடியாக உயர்ந்த ஆபரணத் தங்கத்தின் விலை – அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்!
அந்த வகையில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்த முன்மொழிவு, முதன்மை மற்றும் இடைநிலைக் கல்வி இயக்குநர்கள் இருவராலும் கையொப்பமிடப்பட்டு முதன்மைச் செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மகாராஷ்டிரா முழுவதும் உள்ள பள்ளிகளில், புதிய கல்வியாண்டில் ஒரே சீரான தன்மையை கொண்டு வர, கோடை விடுமுறை மற்றும் அடுத்த கல்வியாண்டின் தொடக்கம் குறித்து அரசு தீர்மானம் அல்லது சுற்றறிக்கை வெளியிடுவது முக்கியம் என்றும் அந்த முன்மொழிவு வலியுறுத்தி இருக்கிறது.
அதாவது, மே 2, 2022 முதல் கோடை விடுமுறை தொடங்கலாம் மற்றும் புதிய கல்வியாண்டு ஜூன் 13, 2022 முதல் தொடங்கலாம் என்றும் கோடையில் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு விதர்பாவில் ஜூன் 27 ஆம் தேதியன்று அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என்றும் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது தவிர மாவட்ட அளவிலான கல்வி அலுவலர்கள், கோடை அல்லது தீபாவளி விடுமுறையை குறைக்கலாம் என்றும் ஒரு கல்வியாண்டில் மொத்த விடுமுறைகள் 76 நாட்களைத் தாண்டக்கூடாது என்றும் அந்த முன்மொழிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.