பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம், கோடை விடுமுறை அறிவிப்பு? அரசுக்கு வலியுறுத்தல்!
டெல்லியில் தற்போது நிலவும் கடுமையான வெப்ப நிலையை கவனத்தில் கொண்டு பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றியமைக்கவும் அல்லது கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்கவும் வேண்டும் என்று பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடை விடுமுறை
தேசிய தலைநகர் டெல்லியில் கடுமையான வெப்பம் நிலவி வருவதால், பள்ளி நேரங்களை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கோடை விடுமுறையை முன்கூட்டியே அறிவிக்க வேண்டும் என பெற்றோர்கள் அரசுக்கு வலியுறுத்தி உள்ளனர். அதாவது, பள்ளிகள் செயல்படும் தற்போதைய நேரம் மாணவர்கள் வெயிலில் இறங்குவதற்கு ஏற்றதாக இல்லை என பெற்றோர்கள் கருதுகின்றனர். இது குறித்து டெல்லி பெற்றோர் சங்கத் தலைவர் அபராஜிதா கவுதம், ‘கோடைக் காலத்தில் மாணவர்கள் வெயிலில் வெயிலில் இருப்பது மிகவும் ஆபத்தானது.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் விடுமுறை – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
இதனால் மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையுள்ள வெயில் நேரங்களில் வெளியே செல்ல வேண்டாம் என்று மையம் அறிவுறுத்தியது. ஆனால், டெல்லியில் பெரும்பாலான பள்ளிகள் செயல்படும் நேரம் காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஆகும். இப்போது கோடை வெப்பநிலையை கருத்தில் கொண்டு மற்ற மாநிலங்கள் செய்வது போல் பள்ளி நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் அல்லது கோடை விடுமுறையை முன் கூட்டியே அறிவிக்க வேண்டும் என்று டெல்லி அரசைக் கேட்டுக்கொள்கிறோம்’ என்று கூறியுள்ளார்.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் கடந்த வாரம், நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலைக்கு மத்தியில் போதுமான அளவு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் தேவையான உபகரணங்கள் கிடைப்பதற்கான சுகாதார வசதிகளை தயார் நிலையை மறுபரிசீலனை செய்யுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு வலியுறுத்தியது. குறிப்பாக மதியம் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சூரிய ஒளியை தவிர்க்குமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, ஹரியானா மாநில அரசு இன்று முதல் அனைத்து வகுப்புகளுக்கும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.