தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் விடுமுறை – அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று தொடங்கியுள்ள நிலையில் வெயிலின் தாக்கம் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ளது. அதனால் தற்போது மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறை அளிப்பது குறித்து முதல்வர் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்படி இப்போது கோடை விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்துள்ளதை தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் நாளை 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வும், நாளை மறுநாள் 10ம் வகுப்பு தேர்வும் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
Exams Daily Mobile App Download
அத்துடன் தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் என்னும் கத்திரி வெயில் இன்று முதல் 28ம் தேதி வரை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் பள்ளி மாணவர்கள் தற்போது பள்ளிகளுக்கு செல்வதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனால் மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்ல மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். அத்துடன் பெற்றோர்களும் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை? முதல்வர் எடுக்கப்போகும் முடிவு!
மேலும் பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அளிப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்த்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, தமிழகத்தில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக 1 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு நாளை (மே 5) முதல் கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று அறிவித்துள்ளார். அத்துடன் 1 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு நாள் அன்று மட்டும் பள்ளிகளுக்கு வந்தால் போதுமானது என்றும் வழக்கமான வகுப்புகளுக்காக மாணவர்கள் பள்ளிக்கு வர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.