ஜூன் 1 முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
டெல்லி, ஹரியானா, பஞ்சாப், பீகார், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உட்பட வட மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி வருகிறது. மேலும் ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இயல்பை விட பல மடங்கு அதிகபட்ச வெப்பம் நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹரியானா அரசு, ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
கோடை விடுமுறை:
கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகளும், பொதுத்தேர்வும் நடைபெற்று வருகிறது. கோடைக்காலம் நிலவி வரும் இந்த நிலையில், வெப்ப அலை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கிறது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல மாநிலங்களில் கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் ஹரியானா அரசு பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
சென்னையில் நாளை (மே 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
அந்த அறிக்கையில் அனைத்து ஹரியானா பள்ளிகளும் ஜூன் 1ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மூடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கோடை விடுமுறை உத்தரவு ஹரியானாவின் அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கும் பொருந்தும். இம்முறை மாநிலம் முழுவதும் வெயில் அதிகரித்து வருவதால், மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரும் ஹரியானா அரசின் கோடை விடுமுறை உத்தரவுக்காக காத்திருந்தனர். அரசின் இந்த உத்தரவு அறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு, அவை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும் ஹரியானா மாநில பள்ளிக் கல்வி இயக்குனரகமும் கடுமையான வெப்பம் காரணமாக பள்ளி நேரத்தை மாற்றியமைத்துள்ளது. ஹரியானா அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின்படி, புதிய கல்வி அமர்வு 2023 ஜூலை 1, 2022 அன்று தொடங்கும் மற்றும் 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பள்ளி நேரங்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், கோடை விடுமுறையில், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, அந்தந்த ஆசிரியர்களால் ஆன்லைனில் பாடம் கற்பிக்கப்படும், அதற்கு வசதியாக, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் டேப்லெட்/ஸ்மார்ட்போன்களை மாநில அரசு விநியோகிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.