சென்னையில் நாளை (மே 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

0
சென்னையில் நாளை (மே 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
சென்னையில் நாளை (மே 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!
சென்னையில் நாளை (மே 27) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை!

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு முகாம்களை ஏற்படுத்தி அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கானோர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக நாளை சென்னையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் கலந்து கொள்வதற்கான தகுதிகளை பற்றி பார்ப்போம்.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பெரும்பாலானோர் தங்கள் வேலைகளை இழந்தனர். அத்துடன் அரசுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டதால் அரசாலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கி தர முடியாத நிலை இருந்தது. தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அதன்படி தற்போது பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

Exams Daily Mobile App Download

அதன் தொடர்ச்சியாக தற்போது சென்னையில் நாளை 25க்கும் மேற்பட்ட தனியார் துறை இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் மூலமாக தனியார் துறை நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் வீர ராகவ ராவ் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களிலும் 2வது மற்றும் 4வது வெள்ளிக்கிழமைகளில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

காவல் துறையில் 835 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பங்கள் வரவேற்பு! முழு விபரம் இதோ!

இந்த வேலைவாய்ப்பு முகாம் கிண்டி, ஆலந்தூர் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு வளாகத்தில் உள்ள தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஐடிஐ, பட்டயப்படிப்பு, கலை, அறிவியல், மற்றும் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு பெற்றவராக இருக்க வேண்டும். அதனால் இந்த வாய்ப்பை வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!