தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கோடை விடுமுறை கட்?
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் தாமதமாக ஆரம்பித்ததால் இந்த ஆண்டு கோடைகால விடுமுறை குறைய வாய்ப்பு இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலை பாதிப்புகள் குறைந்து வந்த நிலையில் பொது மக்களின் நலன் கருதி அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக மீண்டும் பள்ளிகளை திறந்து நேரடி வகுப்புகளை நடத்தவும் அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் 1ம் தேதி அன்று தமிழகத்தில் 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஏற்கனவே நடத்த திட்டமிடபட்டிருந்த திருப்புதல் தேர்வு நடத்தப்பட்டது. இந்த வருடம் மே மாதம் பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கோயம்புத்தூரில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
இந்த நிலையில் தற்போது இந்த நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வுகள் மற்றும் இறுதித் தேர்வுகள் மே மாதம் இறுதி வரை நடைபெற உள்ளது. அதன்படி, 12 ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு மே மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதியுடன் முடிவு பெறுகிறது.11 ஆம் வகுப்புக்கு, மே மாதம் 9 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரையும், 10 ஆம் வகுப்புக்கு, மே மாதம் 6 ஆம் தேதி முதல், 30 ஆம் தேதி வரையும் பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இது தவிர 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஆண்டு இறுதித் தேர்வு நடக்க உள்ளது.
இந்த நிலையில் அடுத்த கல்வி ஆண்டுக்கான (2022 – 2023) அனைத்து வகுப்புகளும் ஜூன் மாதம் 13 ஆம் தேதி தொடங்கும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. அதன்படி, 1 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, மே மாதம் 13 ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 12 ஆம் தேதி வரை கோடை விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் 24 ஆம் தேதி முதல் வகுப்புகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் இந்த ஆண்டு பள்ளி கோடை விடுமுறை காலம் குறைந்து இருப்பதாக மாணவர்கள் வருத்தத்தில் உள்ளனர்.