இன்று முதல் ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 43 டிகிரி செல்சியஸுக்கு மேல் சென்றுள்ளது. ராய்பூர், துர்க்,பிலாஸ்பூர் மற்றும் சர்குஜா பிரிவுகள் போன்ற பகுதிகளில் கடுமையான வெப்ப அலைகள் நிலவி வருகின்றன. இதனால் மாணவர்களின் நலன் கருதி இன்று முதல் ஜூன் 14 வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை அளிக்கப்படும் என சத்தீஸ்கர் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை அறிவிப்பு!
கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடந்த ஆண்டு கடுமையாகத் தாக்கியது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இதை அடுத்து கொரோனா பரவல் குறைந்ததை அடுத்து, 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இதே போல், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதற்கிடையே, கொரோனா மூன்றாவது அலை தாக்கம் குறைந்ததற்கு பிறகு, கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முன்னேற்பாடுகளும் நடந்து வருகிறது.
ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
இந்நிலையில் தற்போது நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு விரைவில் கோடை விடுமுறையை அறிவிக்க வேண்டும் என பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் வெயில் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கோடை வெப்பம் 42 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்ரல் 24) முதல் கோடை விடுமுறை என பள்ளிக் கல்வித்துறை வியாழக்கிழமை அறிவித்தது. மேலும் ஜூன் 15ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது நிலவும் வெப்பச்சலனம் காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு கோடை விடுமுறையை முன்கூட்டியே வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் கோடை விடுமுறைகள் ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கும் மற்றும் புதிய கல்வி அமர்வு ஜூன் 15 ஆம் தேதி தொடங்கும் என குறிப்பிடப்பட்டு உள்ளது. இதற்கிடையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் இறுதி வரி மதிப்பீடு ஏப்ரல் 25 அன்று திட்டமிடப்பட்ட பள்ளிகளில், தானாக முன்வந்து மதிப்பீட்டில் சேர விரும்பும் மாணவர்கள் அவ்வாறு செய்யலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இப்போது, அறிவிக்கப்பட்ட இந்த கோடை விடுமுறைகள் ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் என்றும் பயிற்சி மற்றும் நிர்வாகப் பணிகள் வழக்கம் போல் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொற்றுநோய் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டதால் மே 14 வரை இந்த கல்வியாண்டு தொடரும் என்று முன்னதாக முடிவு செய்யப்பட்டு இருந்ததாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.