ஏப்ரல் 26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிகையாக அமலில் உள்ள ஊரடங்கை ஏப்ரல் 26ம் தேடி வரை நீட்டித்துள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் இருந்து சீனாவில் வுகான் நகரில் இருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் சீனாவை தொடர்ந்து பல நாடுகளிலும் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அந்நாட்டு அரசுகள் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகளை அறிவித்தது. தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டில் ஊரடங்கு மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. உலக சுகாதார துறையின் அறிவுறுத்தலுக்கிணங்க தடுப்பூசிகள் செலுத்துதல், முக கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டது.
கேஜிஎஃப் ராக்கி பாய்யின் அம்மா சீரியலில் நடித்துள்ளாரா? இணையத்தில் கசிந்த தகவல்கள்!
அரசின் கட்டுபாடுகளாலும், கொரோனா தடுப்பூசியின் விளைவாலும் கொரோனா வைரஸ் தொற்று பரவல் படிப்படியாக குறைய ஆரம்பித்தது. இதனையடுத்தது அனைத்து நாடுகளும் பொதுமக்களின் நலன் கருதி ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தனர். இந்த நேரத்தில் கொரோனாவின் பிறப்பிறப்பிடமான சீனாவில் பாதிப்புகள் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. அதிலும் சீனாவின் முக்கிய நகரமான ஷாங்காயில் கடந்த பிப்ரவரி மாதம் முதல் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் தடுப்பு பணியாக கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது, இருந் போதிலும் பாதிப்பு குறையாததால் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு ஏப்ரல் 26ம் தேதி வரைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறையும் பட்சத்தில், பகுதி பகுதியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் ஷாங்காய் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.